திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில்
பார்க்கிங் வாகனங்களுக்கு டோக்கன் கொடுத்தவர் மற்றும்
பஞ்சப்பூரில் ஆட்டோ திடீர் டிரைவர் பலி.
திருச்சி மண்ணச்சநல்லூர் கூத்தூர் பனமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் .(வயது 52 ).இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கார் பார்க்கிங் பகுதியில் வாகனங்களுக்கு டோக்கன் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
வழக்கம்போல் வாகனங்களுக்கு டோக்கன் கொடுத்துக்கொண்டிருந்த அவர் திடீரென சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வெயில் கொடுமை தாங்க முடியாமல் இறந்தாரா? அல்லது அவருக்கு மாரடைப்பா? என விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி அவரது மனைவி மாலதி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார்.
சப் -இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோன்று திருச்சி பஞ்சப்பூர் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த சுரேஷ்குமார்
(வயது 37) என்பவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. நண்பர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.