Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தில்லைநகரில் எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம். புதுபொலிவுடன் மீண்டும் தொடக்கம்,

0

'- Advertisement -

திருச்சி தில்லைநகரில் எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம் மீண்டும் புதுப்பொலிவுடன் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம் தற்போது திருச்சி தில்லைநகர் 6-வது கிராசில் புதிய பொலிவுடன் மீண்டும் தனது கிளையை துவக்கி உள்ளது.

Suresh

புதிய கிளையை ஆர் பி எஸ் குழுமத்தின் இயக்குனர் சுப்ரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

எஸ் ஓ டி சி சுற்றுலா தகவல் மையம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் தனது சுற்றுலா சேவைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முதல்கொண்டு ஜப்பான். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளிலும் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல விரும்புவோர் குடும்பத்தினர், நிறுவன ஊழியர்கள் உள்பட பலருக்கும் தனது சேவைகளை அளித்து வருகிறது .

இவர்கள் மூலம் சுற்றுலா செல்பவர்கள் அவர்களுக்கு தேவையான தங்குமிடம்,உணவு வசதிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை திருச்சி கிளையின் இயக்குனர்கள் பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன்,  ஆகியோர் தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.