உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜான்சிராணி மகளிர் மன்றத்தின் சார்பாக விருது வழங்கும் விழா நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி ஜான்சிராணி மகளிர் மன்றத்தின் சார்பாக மன்றத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா,உலக மகளிர் தின விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் திருச்சி ஸ்ருதி ஸ்ரீ ஹாலில் நடைபெற்றது.

முப்பெரும் விழாவில் சிறப்பு சேர்க்கும் விதமாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றல்மிகு பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்களும் துபாய் கத்தார் உள்ளிட்ட மற்ற நாடுகளை சேர்ந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்..
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியர் முருகேஸ்வரி, ட்ரூ டிரஸ்ட் துணை இயக்குனர் மகாலட்சுமி சேத்தனா, தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவை நிறுவனத் தலைவர் ராஜா, டாக்டர் லட்சுமி நந்தகுமார், செயல் அறக்கட்டளை கரோலின், சீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார்கள்.
முன்னதாக ஜான்சிராணி மகளிர் மன்ற நிறுவனர் ஹேமலதா வரவேற்றார் Dr.B.R. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிறுவனர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆத்மா மனநல மருத்துவமனை ஆலோசகர்களின் லூயிஸ் மற்றும் தேவராயநேரி Dr.A.P.J. அப்துல்கலாம் இளைஞர் நல சங்க தலைவர் சரவணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.