திருச்சி 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை நேரில் சென்று வாழ்த்திய ஜான் ராஜ்குமார் மற்றும் டாக்டர் சுப்பையா பாண்டியன்.
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்
திருச்சியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம்
அவருக்கு திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனரும், தலைவருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சந்தித்து பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார்.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி ஆகியோர் உடன் இருந்தனர்.
தேர்தலுக்கு முன்னதாகவே வரலாற்று நூல் ஆராய்ச்சியாளர் முனைவர் ஜான். ராஜ்குமார் நடைபெறவுள்ள தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள் என கூறியது குறிப்பிடத்தக்கது.