ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் வேண்டுகோள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற 24.2.22 அன்று இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 74-ம் ஆண்டு பிறந்த தின விழாசிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.
அது சமயம் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகளும் காலை 9.00 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவபடத்திற்கு மாலை அனிவித்து இனிப்புகள் வழங்கி நலதிட்ட உதவிகள் வழங்கபடவுள்ளது.
மேலும் அந்தந்த பகுதியில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும்.
இந்த நிகழ்வுகளில் அதிமுக கழக நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், செயல்வீரர்களும், விராங்களைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.