Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் நினைவு நாள்: உடன்பிறப்புகள் மன ஆறுதல் பெறும் வகையில் அஞ்சலி செலுத்த வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வேண்டுகோள்.

0

அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர், இதய தெய்வம் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில்

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான 24.12.2021 வெள்ளிக்கிழமை அன்று பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களுடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள

மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை, வார்டு

அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மற்ற இடங்களில் திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

என புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.