இ.பி.எஸ் .-ஓ.பி.எஸ்,
கார்களை வழிமறித்து தாக்கியதை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.
பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ,
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே .பழனிச்சாமி ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போது அவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க .சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.
இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என். ஆர். சிவபதி ,முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி ,கே. கே. பாலசுப்ரமணியன், எம் எல்.ஏ.க்கள் பரமேஸ்வரி முருகன் ,செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் ,ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், அழகேசன்,பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ், டைமண்ட் திருப்பதி மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.