திருச்சி மாவட்டத்தில் :
செவ்வாய், வெள்ளிகிழமைகளில்
மின் நூகர்வோர் குறைதீர் மூகாம்கள்.
திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மின்வாரிய குறைதீர் நாள் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இது தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரிய, திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருப்பது:
திருச்சி மாவட்டத்தில், திருச்சி மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் டிசம்பர் மாதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் முசிறி கோட்ட அலுவலகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும், 7 ஆம் தேதி (செவ்வாய்) துறையூரிலும், 10 ஆம் தேதி (வெள்ளி) ஸ்ரீரங்கத்திலும், 14 ஆம் தேதி (செவ்வாய்) லால்குடியிலும், 17 ஆம் தேதி (வெள்ளி)
திருச்சி கிழக்கு கோட்டத்திலும், 21 ஆம் தேதி திருச்சி நகரிய கோட்டத்திலும், 28 ஆம் தேதி செவ்வாய்க்ழைமை மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களுக்கு ஏற்படும் மின் விநியோகம் தொடர்பான குறைகள், புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.