Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

0

 

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.