பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றவரிடம் அரிவாள் காட்டி பணம் பறித்தவர் கைது.
பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றவரிடம் அரிவாள் காட்டி பணம் பறித்தவர் கைது.
திருச்சி பொன்மலை பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் பறிப்பு
அரிவாளுடன் வாலிபர் கைது.
திருச்சி குழுமணி பஜார் கலியமூர்த்தி ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்.( வயது 58). இவர் பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் அரிவாள் முனையில் நடராஜனை மிரட்டி பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து நடராஜன் பொன்மலை போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பொன்மலை தங்கேஸ்வரி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து அரிவாள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

