லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் மிலாடி நபி வாழ்த்து.
லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் மிலாடி நபி வாழ்த்து.
லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் வெளியிட்டுள்ள மிலாது நபி திருநாள் நல்வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:-
அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை, மிலாது நபி என மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும், லோக் ஜனசக்தி கட்சி சார்பில் அன்பான மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பசியால் வாடும் ஏழைகளுக்கு உதவுங்கள் என்று இடைவிடாமல் போதித்த கருணையின் வடிவம் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள், அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை உலகுக்கு அளித்தவர் அவர்.
மனிதகுலத்தை அகந்தையில்லா நற்பண்புகளுடன் வளர்த்தெடுக்கும் வழிவகையினை வழங்கியவர் அவர்.
அவரது போதனைகளும், அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள்.
அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமுதாயத்தினரிடம், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரான மண்டல் நாயகன், மறைந்த மக்கள் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் மிகுந்த அன்புடன் நடந்துகொண்டார் என்பதை அனைவரும் அறிவோம்.
அதே வழியில் லோக் ஜனசக்தி கட்சியை தற்போது வழிநடத்திவரும், மக்கள் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் இளைய சகோதரர் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பசுபதி பஸ்வான் அவர்களும் இஸ்லாமிய சமுதாயத்தினரை சொந்த சகோதரர்கள் போல் அரவணைத்துச் செல்வதை அனைவரும் அறிவோம்.
லோக் ஜனசக்தி கட்சி சார்பில், உள்ளார்ந்த சகோதர உணர்வுடன், இஸ்லாமிய சமுதாய பெருமக்களுக்கு மனமார்ந்த மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மணிமாறன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ளார்.