தொடர்ந்து 1500 தமிழ் கூட்டங்களை நிகழ்த்திய இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்குக்கு உலக சாதனை தமிழ் அமைப்பு சான்றிதழ்.
திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு தொடர்ந்து வாரம் தவறாமல் 1500 தமிழ் கூட்டங்களை நிகழ்த்திய சாதனையைப் பாராட்டி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக
” உலக சாதனைத் தமிழ் அமைப்பு ”
எனப் பதிவு செய்து சான்றிதழ் மற்றும் கேடயம் அரங்கின் பொறுப்பாளர் இராச.இளங்கோவன் அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

உலக சாதனை சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்குகினார் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் அரிமா டிராகன் ஜெட்லி.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ப.வேங்கடேசன், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் பக்கிரிசாமி , பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.