தெற்காசிய ஊரக இளைஞர் போட்டியில் பங்குபெறும் வீரர்களை திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வழியனுப்பும் நிகழ்ச்சி.
தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்க திருச்சியை சேர்ந்த அருண், சரவண குமார் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில், ஏழ்மையான குடும்பத்தை சாரந்த வீரர்கள் சாதனை படைக்க
பயணச்செலவு தொகை உதவிகேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்பட பல நல்ல உள்ளங்கள் உதவி செய்தார்கள்.
அவர்கள் பூட்டான் நாட்டில் நடக்கும் இளைஞர்களுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 7, 8ம் தேதி நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்ப வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் , தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே. ராஜா, இளைஞர் அணி மணிவேல் அண்ணாதுரை ஆகியோர்
திருச்சியிருந்து ரயில் நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள் .







