சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நெகிழியை (பிளாஸ்டிக்) தடை வேண்டி மக்கள் சக்தி இயக்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
கொரோனா காலத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாழ்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்து விட்டது.
ஒரு முறை பயன்படுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு மாநில முழுவதும் தடை செய்ய வேண்டும்.
உற்பத்தியும் பரிமாற்றமும் உள்ளூர் அளவிலேயே இருந்தபோது நெகிழி (பிளாஸ்டிக்) க்கான தேவை இல்லாமல் தான் இருந்தது. அது விரிவடையத் தொடங்கியதும், பொருட்களை பொட்டலம் கட்ட எளிதாக கை கொடுத்தது நெகிழி (பிளாஸ்டிக்) . ஆனால் , அதனால் ஆபத்தும் அல்லவா உருவாகிவிட்டது .
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அரசை மட்டுமே நம்பியிராமல் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பினை வழங்க வேண்டும் .

நீர், நிலம், காற்று என அனைத்தையும் பாதிக்கும் நெகிழிப் (பிளாஸ்டிக்ப்) பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்
2019ம் ஆண்டு ஜனவரியில் , தமிழகத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை உற்பத்தி செய்யவும், கடைகளில் பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்திருந்தது.
உள்ளாட்சித் துறை அலுவலர்களும் அடிக்கடி தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில்,நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்து,நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை பறிமுதல் செய்தும் வந்தனர். நாளடைவில் , அந்தப் பணியை செய்யாததால் மீண்டும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன .
பொதுமக்களும் அதை வாங்கி உபயோகித்து விட்டு தெருக்களிலும், நீராதாரங்களிலும் மனசாட்சி துளியுமின்றி தூக்கி வீசி வருகின்றனர்.
மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லை. வணிகர்கள் பலருக்கு சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை இல்லை. இதனால் நீர் நிலைகளில் பாதிப்பும், சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடும் ஏற்படுவதை பற்றி யாருமே கவலைப்படவில்லை.
எனவே, தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை எந்த தரப்பினரும் மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என மக்கள் சக்தி இயக்க சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகர் நீலமேகம் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார் .