Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மறைமாவட்ட ஆயராக ஆரோக்கியராஜ் பொறுப்பேற்றார்.

0

'- Advertisement -

திருச்சி மறைமாவட்ட புதிய ஆயராக ஆரோக்கியராஜ் பொறுப்பேற்பு

திருச்சி மறைமாவட்டத்தில் ஆயராக இருந்த அந்தோணி டிவோட்டா 2 வருடத்திற்கு முன்பு மறைந்தார். அதன் பிறகு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அன்புரோஸ் பொறுப்பு ஆயராக இருந்து வந்தார்.

Suresh

இந்நிலையில் திருச்சி மறை மாவட்டத்திற்கு புதிய ஆயராக எஸ்.ஆரோக்கியராஜ் (வயது 67) தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு ரோமில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டது. 1954-ம்ஆண்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டையில் பிறந்த இவர், 1981-ம் பெங்களுரு குருமடத்தில் பயின்று குருபட்டம் பெற்றார்.

மேலும் திண்டுக்கல், அய்யம்பட்டி, உடையாபட்டி, திருச்சி மேலப்புதுார் மரியன்மை பேராலயம், சகாயமாதா தேவாலயங்களில் பங்குத் தந்தையாகவும், தமிழ்நாடு ஆயர்கள் கவுன்சிலின் பிராந்திய செயலாளர், பால் செமினெரியின் ரெக்டர், மறைமாவட்ட அதிபர் என பல பொறுப்புகளை வகித்தவர்.

திருச்சி மேலப்புதுார் புனித மரியன்னை பேராலயத்தில் நேற்று பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அன்புரோஸ் முன்னிலையில் ஆரோக்கியராஜ் திருச்சி மறை மாவட்ட ஆயராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.