Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 6. மத்திய அரசு அறிவிப்பு

0

'- Advertisement -

Ad banner

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் தொகை காசோலை, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை டெல்லியில் குடியரசு தலைவரால் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த மாதம் 20 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.