Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு. வீடுகளில் கறுப்புக்கொடி, எதிர்ப்பு வசனங்கள் கோலம்.

0

 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்படவுள்ளதை கண்டித்து கருப்பு தினமாக அனுசரித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று (வியாழக்கிழமை) கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமாரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், எதிர்ப்பு வாசகங்களுடன் கோலமிட்டும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.