Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. ஆணையர் தகவல்

0

'- Advertisement -

Ad banner
TVK ad

‘குடமுருட்டி பாலம்‌ அய்யாளம்மன்‌
படித்துறை திருப்பத்தில்‌ குடிநீர்‌ உந்து குழாயில்‌ கசிவு ஏற்ப்பட்டுள்ளதை மராமத்து பணி நடைபெறுவதால் நாளை திங்கள்‌ கிழமை ஒரு நாள்‌ மட்டும் குடிநீர்‌ விநியோகம்‌ இருக்காது மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தகவல் .
‘ திருச்சி மாநராட்சி, ஸ்ரீரங்கம்‌: கோட்டம்‌
கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும்‌ உந்து
குழாய்‌ மூலமாக சிந்தாமணி மேல்நிலை நீர்தேக்கத்‌ தொட்டி மற்றும்‌.
மலைக்கோட்டை மேல்நிலை நீர்தேக்கத்‌ தொட்டிகளுக்கு குடிநீர்‌
ஏற்றப்பட்டு சிந்தாமணி பகுதிகள்‌, வி.எண்‌ நகர்‌, வெனிஸ்‌ தெரு,
காளியம்மன்‌ கோவில்‌ தெரு, வாணப்பட்டரை தெரு, நந்தி கோவில்‌
தெரு, சங்கரன்‌ பிள்ளை தெரு, பட்டவர்த்‌ ரோடு, பூசாரி தெரு, மேல
தேவதானம்‌, பாரதியார்‌ தெரு, என்‌.எஸ்‌.பி ரோடு, மலைக்கோட்டை
சுற்றியுள்ள பகுதிகள்‌,சின்னடகடை வீதி, இ.பி ரோடு, பாபு ரோடு,
பாரதியார்‌ தெரு, ஆண்டார்‌ வீதிகள்‌, ஜான்‌ தோப்பு ஆகிய
பகுதிகளுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கரூர்‌ பைபாஸ்‌ சாலையில்‌ குடமுருட்டி பாலம்‌ அய்யாளம்மன்‌
படித்துறை திருப்பத்தில்‌ குடிநீர்‌ உந்து குழாயில்‌ கசிவு
ஏற்ப்பட்டுள்ளதை மராமத்து பணி செய்திட வேண்டியுள்ளதால்‌
மேற்கூறப்பட்டுள்ள பகுதிகளுக்கு மட்டும் நாளை (07.12.2020) திங்கள்‌ கிழமை
ஒரு நாள்‌ குடிநீர்‌ விநியோகம்‌ இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.