Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருந்தாத வியாபாரிகள், திருந்துவார்களா திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ?

திருந்தாத வியாபாரிகள், திருந்துவார்களா திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ?

0

கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் சாக்கடையாக காட்சி அளிக்கிறது என செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதனைத் தொடர்ந்து அடுத்த நாளே மாநகராட்சி அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையாக குளத்தில் உள்ள குப்பைகள் அள்ளப்பட்டு சுத்தப் படுத்தப் பட்டது.

என்னதான் அதிகாரிகள் தூய்மை செய்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என அப்போதே கூறியிருந்தோம்.

ஆனால் இப்போது மீண்டும் தெப்பக்குளத்தில் உணவு கழிவுகள் மிதந்து வருகின்றன இதற்கு காரணம் தெப்பக்குளம் சுற்றி உள்ள சிறு டிபன் கடைகள் மற்றும் இரவு நேர பாஸ்ட் புட் கடைகளின் உரிமையாளர்களே ஆகும்.

இவர்கள் யார் யார் என மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக விசாரித்து அவர்களிடம் உரிய அபராதம் விதித்து. மீண்டும் அதே போல் செயல்படும் வியாபாரிகளுக்கு கடை போட நிரந்தர தடை விதித்தால் தெப்பக்குளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை ஆகும்.

உடனடி நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள் ?

தெப்பக்குளம் பகுதி பொது மக்கள் எதிர்பார்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.