Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் நடந்து சென்ற வாலிபரிடம் தங்க சங்கிலி பறிப்பு.4 பேருக்கு போலீசார் வலைவீச்சு.

0

'- Advertisement -

திருச்சி பாலக்கரையில் நடந்து சென்ற வாலிபரிடம்
தங்க சங்கிலி பறிப்பு .
4 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி வரகனேரி கல் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரீகன். இவரது மகன் அந்தோணி குரூஸ் (வயது 18). இவர் திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்டு ரேஷன் கடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் இவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அந்தோணி குரூஸ் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்கு பதிந்து மாயமான 4 மர்ம நபர்களை தேடி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.