தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மண்டலம் சார்பில் திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 2016-2017 ஆண்டு தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உதவியாக உறவினர்கள் அருகில் இருந்து உதவி செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு தங்குவதற்கு ஒரு நபருக்கு 10 ரூபாய் வாடகை வசூலித்து தங்குவதற்கு கட்டப்பட்ட கட்டிடம் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.
இதனால் மக்களின் வரிப்பணம் வீண். தற்போது மக்களுக்கு பயன்படாமல் ஊழியர்கள் விடுதியாக பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டால் மாநகராட்சி மேயர், ஆணையர் அலுவலகத்தில் கேளுங்கள் என்று சொல்லி காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனை கண்டித்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க கோரியும் இன்று மருத்துவமனை முதல்வரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதில் திருச்சி ரமணா மத்திய மண்டலம் செயலாளர் ஏசி.ராமலிங்கம் நிறுவனர் ரெட் பிளாக் கட்சி ஈ.கணேசன் திருவெறும்பூர் இளம் புலிகள் ஒன்றிய செயலாளர் சிட்டிசன் காமராஜ் சமூக ஆர்வலர் மற்றும் கொண்டையம் பேட்டை கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.