திருவரங்கத்தில்
வயிற்றுவலியால் எலி மருந்து சாப்பிட்டு
15 வயது சிறுமி தற்கொலை.

திருவரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 50). இவரது மகள் சத்யபிரியா ( வயது 15). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், எலி மருந்தை சாப்பிட்டார். இதனை அறிந்த பெற்றோர் உடனே சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.