லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபுவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த திருச்சி சரக டி ஐ ஜி .
திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் டில்லி பாபு. இவர் மீது லஞ்ச புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினர். இதில் அவர் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து திருச்சி சரக டிஐஜி சிபி சக்கரவர்த்தி அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

