Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர் புகார்.

0

'- Advertisement -

தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை பதிவு செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர் புகார்.

 

Ad banner

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர் இன்று தனது மகன் புவனேஸ்வருடன்

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

 

TVK ad

எனது கணவர் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பால்ராஜ் என்பவருக்கும் எங்களுக்கும் பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்தது பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயர் நீதிமன்றம் மூலம் உரிமையை பெற்று அந்த இடத்தை நாங்கள் அனுபவித்து வந்தோம் இந்த முன் விரோதத்தில் அந்த நபர் மற்றும் அவரது மகன் மனைவி மருமகன் ஆகியோர் கடந்த 27-ந் தேதி

எனது மூத்த மகன் வீட்டிலிருந்து வெளியே வந்த போது வழிமறித்து பிரச்சனை செய்தனர் இதனை தட்டி கேட்ட எனது தலையில் கல்லால் தாக்கினர் ,

இது தொடர்பாக புகார் அளிக்க எனது கணவர் வேல்முருகன் மற்றும் இளைய மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே புகார் மனுவை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டி

கொலை செய்ய முயன்றனர்.மேலும் எனது இளைய மகனின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர். ஆனால் இந்த வழக்கி இல் ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். கொலை வெறி தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் கைது செய்யாமல் உள்ளனர் ஆகவே சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.