திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கரின் 70வது நினைவு நாள் அனுசரிப்பு. மலர் தூவி மரியாதை செய்து வணங்கினார் .
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்.சட்ட மாமேதை அம்பேத்கரின் 70வது நினைவு நாள் அனுசரிப்பு
மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் 70வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி

இ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாநகரக் செயலாளர்
மு. மதிவாணன் அவர்கள் தலைமையில்,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன், முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
இந்த நிகழ்வில் மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில் , மாவட்டத் நிர்வாகிகள் கோவிந்தராஜ் மூக்கன், குணசேகரன் பகுதி செயலாளர்கள் நீலமேகம், கொட்டப்பட்டு .தர்மராஜ், பாபு, மணிவேல், விஜயகுமார் சிவக்குமார் வட்ட செயலாளர் மனோகர் மற்றும் மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர – தொகுதி அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.

மாலையில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார் .

