திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள்
விற்ற வாலிபர் கைது.
மாத்திரைகள் ,

ஊசிகள் பறிமுதல்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
அந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செக் போஸ்ட் அருகே போதை மாத்திரைகள் விற்றதாக கடலூர் பண்ருட்டி பொன்னன் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமரன் (வயது 24 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்.