திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் அசாம் மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த அசாம் மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.