Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை தமிழக அரசு எச்சரிக்கை

0

'- Advertisement -

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால் இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Suresh

இதனால், மக்கள் கடை விதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிவருகின்றனர்.

சமூக இடைவெளியை மக்கள் பல இடங்களில் காற்றில் பறக்கவிட்டு பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதனிடையே, பல்வேறு இடங்களில் காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல் எனவும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள தமிழக அரசு உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.