Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் பள்ளி வேன் டிரைவரிடம் 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள் .

0

'- Advertisement -

ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு

 

திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (வயது45). மேலூர் ரோட்டில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாபுவை எட்டி உதைத்ததில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்துள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போனை அந்த மர்ம நபர்கள் பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பாபு போலீஸ் அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார்,இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.