Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போக்குவரத்து இடையூறு இன்றி தொடர்ந்து இதே இடத்தில் வியாபாரம் தொடரும். திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய் காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்க கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்.

0

பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் வரை

திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது இருக்கும் நிலையிலேயே தொடரும்

என திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு மாங்காய் காய் கனிகள் வியாபாரிகள் முன்னேற்ற சங்க கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்.

 

திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கறி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் கமிட்டி கூட்டம் தலைவர் கே.டி. தங்கராஜ், தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் கே.ஏ.எச்.ஜமால் முகமது வரவேற்றார்.

பொருளாளர் எம்.கே.எம்.காதர் மைதீன், அவைத் தலைவர் யூ.எஸ்.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஆர்.சீனிவாசன், எப்.பதுருல்லா, பி.ஏ.எச்.முகமது ஹனிபா,ஏ.எம்.எப்.

முகமது பாரூக், ஆலோசகர் பி.கே.எஸ்.அப்துல் மலிக், பி.சிவா, எஸ்.பார்த்தசாரதி, ஆர்.ஜி.சந்திரன்,கே.டி.சீனிவாசன், பி. கௌதம், ஏ.தனபால், எஸ்.எம்.யூசுப் அலி, ஜி.எம்.கே. கிருஷ்ணமூர்த்தி, ஏ.எம்.பி மைதீன் பிச்சை, எஸ்.ராஜ் முகமது, பி. விநாயகமூர்த்தி, எஸ்.கண்ணன், பி.தண்டாயுதபாணி மற்றும் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் கீழ் வருமாறு:-

 

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 70 ஆண்டு காலமாக மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைமுறையில் இருப்பதை தனித்தனியாக பிரிப்பது என்பது திருச்சி காந்தி மார்க்கெட்டை பொருத்தவரை இயலாத காரியம் ஆகும்.திருச்சி காந்தி மார்க்கெட் காம்பவுண்டுகள் மற்றும் அனைவரும் வியாபாரம் செய்வது என்றும் காந்தி மார்க்கெட்டை சுற்றி பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் தினசரி சரி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தையும், போக்குவரத்து காவல்துறையையும் வலியுறுத்திக் கொள்வது,

திருச்சி மாநகராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிதாக ஏற்படுத்தியிருக்கும் பஞ்சாபூர் புதிய பஸ் நிலையம் அருகில் உருவாக உள்ள புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் நமது காந்தி மார்க்கெட்டின் அனைத்து வியாபாரிகளின் மேலான ஆலோசனைகளை கேட்டறிந்து அதன் அடிப்படையில் மொத்தம், சில்லறை வியாபாரிகள் என முறைப்படுத்தி முயற்சிப்பது,மற்ற சங்கங்களின் வியாபார விஷயங்களிலோ தனி மனித வியாபார சுதந்திரத்திலோ யாரும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவும், தெரிவிக்கவும் முடியாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வியாபாரிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் . அராஜக வார்த்தைகளுக்கு எங்களது சங்கம் அஞ்சாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,காந்தி மார்க்கெட் காம்பவுண்டுக்குள் யாரும் எந்தவித வியாபாரமும் சட்டத்திற்கு உட்பட்டு செய்வதை எங்கள் சங்கம் மனப்பூர்வமாக வரவேற்கிறது,

தற்போது செயல்பட்டு வரும் திருச்சி காந்தி மார்க்கெட் பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் ஏற்பட இருக்கும் புதிய காய்கறி மார்க்கெட் நடைமுறைக்கு வரும் வரை இப்பொழுது இருக்கும் நிலையே தொடரும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்வது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.