Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாவட்ட இளையோருக்கான தடகளப்போட்டி 2025 திருச்சியில் நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025.

திருச்சி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட குழந்தை மற்றும் இளையோருக்கான தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று 15.02.25 சனிக்கிழமை காலை வயது 8, 10, 12, 14 மற்றும் 16 வயது என (தனிதனியே) மாணவ, மாணவிற்கான போட்டிகள் நடைபெற்றது
.
இப்போ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாலை 6.00 மணிக்கு திருச்சி மாவட்ட கடவுளை சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், துணைச் செயலாளர் எம்.கனகராஜ், ஆகியோர் முன்னிலை நடந்தது.

போட்டியில் விளையாட்டு வீராங்கனைகள் 1100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

Suresh

விழாவில் தெற்கு ஆசியா விளையாட்டு போட்டிகள் சென்ற மாதம் ஜனவரி 10 to12 தேதியில் நடந்த 70 வயதுக்கு மேல் உள்ள பிரிவில் எஸ்.லாசர்சூசைநாதன் 800 மீட்டர் ஒட்டத்திலும்,1500 மீட்டர் ஒட்டத்திலும் ஆகிய இரண்டிலும் வெள்ளி பதக்கங்கள் பெற்றவர், டி.ஆறுமுகம் 4 x 100 தொடர் ஒட்டத்தில் 3வதாகவும், 4 x 400 மீட்டர் தொடர் ஒட்டத்தில் 2வதாக வெற்றி பெற்று ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கங்கள் பெற்றவர்களை இருவரையும் பாராட்டு பொன்னடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினார்கள்

தடகள உதவி தலைவரும், (Commandant of policeTSP 1BN Trichy) கமாண்டர் ஆப் போலீஸ்
வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு எம்.ஆனந்தன், ஒலிம்பியன் பெ.சுப்ரமணியன், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் மாவட்ட ஆகியோர் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவருக்கு பதக்கங்களுடன் கூடிய சான்றிதழ்களும், வெற்றி பெற்ற்ற அணிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் சுழற்க்கோப்பைகளும் வழங்கினார்கள்.

விழாவில் திருச்சி மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளர் கே.கண்ணன்,தடகள சங்க நிர்வாகி சுரேஷ்பாபு, ரவிந்திரன், ரெங்கச்சாரி, நடராஜன், லட்சுமணன், பள்ளி உடற்பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள்.

முன்னதாக துரை வெங்கடேசன் வரவேற்றார்.

முடிவில் மாவட்ட தடகள சங்க தொகுப்பாளர் முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.