திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சர்க்கரை நோயால் பாதித்த முதியவர் விஷம் அருந்தி சாவு
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை .
திருச்சி சங்கிலியாண்டபுரம் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60 ).இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ,அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்த அவர் விஷம் குடித்தார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்குப்பதிந்து மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.