Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே மதுபோதையில் வந்தவருக்கு அபராதம் விதித்ததால் எஸ்.ஐ.யை தாக்கிய 7 பேர் கைது.

0

 

திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.

துறையூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அப்துல்லா, உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகே சக காவலர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மது போதையில் வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த அவர், தன் நண்பர்களை வரவழைத்து போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையை இன்று போக்குவரத்து உதவி ஆய்வாளர் அப்துல்லாவை தாக்கிய ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.