கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சின்ன மிளகுபாறையை சேர்ந்த விசுவாசிகள் அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினர்.
கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சின்னமிளகுபாறையை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் “பர்ணாபாஸ்” அவர்களின் ஏற்பாட்டின் பேரில் கேப்டனின் குருபூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
மிளகுபாறை CMP சுரேஷ், R.D.ராஜேஸ்,
வினோத்,
மகாலிங்கம்,
வெங்கடேசன்,மோகன்,விக்கி,கோபால்,
சரவணன்,வள்ளி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முன்னதாக சின்னமிளகு பாறை பகுதியை சேர்ந்த கேப்டனின் விசுவாசிகள் அவரது திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர் .
நிகழ்ச்சியின் முடிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது .