திருச்சி வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வாரீர் . மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை:-
ஆஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி வருகின்ற 6.12.2024, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அரியலூர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அரசு கொறடா தாமரை S.ராஜேந்திரனின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தருகிறார்.
அன்று (6.12..2024, வெள்ளிக்கிழமை) காலை 6:45 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதுசமயம் அதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் அனைவரும் திரளாக கலந்து கேட்டுக் கொள்கிறேன் என பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .