Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இனிமே பேக்கரியில வாங்கி சாப்பிடுவீங்க…. அழுகிய முட்டையில் கேக் பிரட் தயாரிப்பு . திருச்சியில் 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல் .

0

 

திருச்சி தென்னூரில் உள்ள பேக்கரிகளில் 8,000 அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறையினா், இரு பேக்கரிகளுக்கு சீல் வைத்தனா்.

திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருச்சி தென்னூா் ஆழ்வாா்தோப்பில் உள்ள இரு பேக்கரிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில், நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, கேக் மற்றும் பிரட்டுகள் தயாா் செய்வதற்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அசாருதீன், கருணாகரன் ஆகிய இருவரது பேக்கரியில் தயாரிப்பு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8,000 அழுகிய முட்டைகள், அழுகிய முட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட 215 கிலோ பேக்கரி உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

தொடா்ந்து, மேற்கண்ட இரு பேக்கரிகளுக்கும் சீல் வைத்தனா்.

மேலும், இந்த பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.