Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல். பேடிஎம் ஸ்வைப் மெஷின் பறிமுதல்.

0

 

திருச்சியில்
இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல்

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு
குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர் .
பின்னர் விபச்சார கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதனை திருச்சி மணிகண்டம் அக்ரஹாரம் தெரு பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 34) திருப்பூர் அவிநாசி ரோடு பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (48) ஆகியோர் நடத்தி வந்தது தெரியவந்தது.
அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் விபச்சாரத்துக்கு ஈடுபடுத்திய திருப்பூர் கார்வம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண், திருச்சி துவாக்குடி மலை முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஆகிய மூன்று பேரை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபச்சார கும்பலிடம் இருந்து 5 ஆண்ட்ராய்டு செல்போன்கள் பேடிஎம் ஸ்வைப் மெஷின், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.