Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு . விரைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன் திறக்கப்படும் கலெக்டர் அறிவிப்பு.

0

'- Advertisement -

ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டார் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Ad banner

இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

தற்போது பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

விரைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன் சேர்ந்து பறவைகள் பூங்காவும் திறக்கப்படும்.

இதேபோல் முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி இன்னும் பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த நிதி கேட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.