ஜூன் 4 வரை ரூ50000க்கு மேல் பணம் எடுத்துசெல்ல கட்டுப்பாடு.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூடியதாவது :-
தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஜூன் 4ம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்திருந்தாலும், வாகன சோதனை தொடரும். உரிய ஆவணம் இல்லாமல் ரூ50000க்கும் மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஜூன் 4ம் தேதி வரை தொடரும்.
தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையால் சுமார் ரூ28 கோடி பணம் , பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ரொக்க பணம் ரூ88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ரூ 4.53 கோடி மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ4 கோடி சிக்கி உள்ளது. இது குறித்த விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 2 கோடி 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.