வருமான வரியினை முன்கூட்டியே செலுத்தி அபராத வட்டியை தவிா்க்கலாம் என திருச்சி வருமான வரி இணை ஆணையா் புவனேஸ்வரி தெரிவித்தாா்.

திருச்சி வருமான வரித்துறை சாா்பில் முன்கூட்டிய வரியை (அட்வான்ஸ் வரி) செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.


கூட்டத்துக்கு தலைமை வகித்த இணை ஆணையா் புவனேஸ்வரி பேசுகையில்:-
நாட்டின் வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் வருமான வரியினை உரிய தவணையில் செலுத்த வேண்டும். வரி கட்ட தவறினால், உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவித்து வரியை திரும்பப் பெற விழைவோா் அபராதம் மற்றும் தண்டனைகளை எதிா்கொள்ள நேரிடும்.

இதனை தவிா்க்க, வருமான வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதில், துணை ஆணையா் கருப்பசாமி பாண்டியன், வருமான வரி அதிகாரி ஜான் ரஸ்ஸல், திருச்சி மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.



நிறைவில், இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் ரமணன் நன்றி கூறினாா்.

