Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலன் வீட்டின் மீது கல்வீச்சு. கள்ளக்காதலியின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு

0

'- Advertisement -

 

ராம்ஜி நகரில் பரபரப்பு
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் லாரி டிரைவரின் வீட்டில் கல் வீசிய பெண்ணின் உறவினர்கள்.

திருச்சி ராம்ஜி நகர் கே கல்லிக்குடி காந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). டிரைவர் லாரி. இவருக்கு திருமணம் ஆகி வள்ளியம்மாள் என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜாவுக்கும் செம்பட்டு திருவளர்ச்சி பட்டி பகுதியை சேர்ந்த சேகர் (40) என்பவருக்கும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து சேகர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சேகர் தனது உறவினர்கள் சண்முகம் (வயது 50), அவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47), சடையன் (வயது57) ஆகியோருடன் ராஜா வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது வீட்டில் அவரது மனைவி வள்ளியம்மாள் இருந்துள்ளார். அவரிடம் ராஜா, உனது கணவர் எனது உறவு பெண்ணுடன் தகாத உறவை வைத்துள்ளார் இதனை அவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என மிரட்டியதோடு வீட்டின் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்பட்டது.

இதில் ராஜாவின் வீட்டு மேல் கூரை ஓடுகள் உடைந்து நொறுங்கின. இதுகுறித்து வள்ளியம்மாள் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த பேரில் சேகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.