தந்தை பெரியார் அரசு கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துவக்கி வைத்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழிகாட்டுதல்படி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் தந்தை பெரியார் அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியார் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல்,
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். விஜயலட்சுமி, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவருமான இன்ஜினியர் ராஜசேகர், நெடுஞ்செழியன் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் குமரவேல், பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் முனைவர் ராதிகா, திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் குணசேகரன் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் 150 மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.