Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் மாணவி மற்றும் இளம் பெண் மாயம்.

0

'- Advertisement -

 

திருவரங்கத்தில் வெவ்வேறு சம்பவங்களில்
கல்லூரி,இளம் பெண் மாயம் .

திருவரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகள் தீபிகா (வயது 22).பி.பி.ஏ. படித்து வரும் இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் கலாவதி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதேபோன்று திருவானைக்காவல் அருண் நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 29)இவருக்கு திருமணம் ஆகி சித்ரா (வயது 25) மற்றும் மாறன் (வயது 3) என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்தராம். இதனை கணவர் விக்னேஷ் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சித்ரா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பிறகு விக்னேஷ் பல இடங்களில் சித்ராவை தேடிப் பார்ததும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து விக்னேஷ் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ராவை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.