திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணி
வீடு தேடி ரேசன் பொருள் வழங்கும் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் வருகிற 10 ந்தேதி வரை ரேசன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இன்று திருச்சியில் பல்வேறு ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர் .
குறிப்பாக இன்று கருப்பு சட்டை அணிந்து கொண்டு வீடு தேடி முதியவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

