திருச்சியில்
அரசு மருத்துவமனையில் கான்ஸ்டபிள் கையை கடித்த கைதி மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு சம்பவம்.
ஊசியை முழுங்க முயன்ற போது தடுத்ததால் போலீஸ்காரர் கையை கடித்த கைதி.
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் சேர்ந்தவர் விஜய் (வயது 29) இவர் மீது திருட்டு வழக்கில் திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக போலீசார் அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் திடீரென ஊசியை முழுங்க முயன்றார்.இதை கன்ட கான்ஸ்டபிள் வேல்முருகன் உடனடியாக (வயது37 ) அவரது தொண்டையிலிருந்து ஊசியை எடுக்க முயன்றார் அப்போது விஜய் போலீஸ்காரர் வேல்முருகனின் கையை கடித்து காயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

