திருச்சி: எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அமமுக சார்பில்,
திருச்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில்,
அமமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் சாருபால தொண்டைமான் ஆகியோர் முன்னிலையில்,
திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு ,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்,

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள்,நகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளை, ஊராட்சி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

