திருச்சியில் ஓரமாக அமர சொன்ன மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.கணவன் மனைவி மீது வழக்கு பதிவு.
திருச்சியில் ஓரமாக அமர சொன்ன
மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.
திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கே தள்ளுவண்டியில் சூப்பு கடை நடத்தி வரும் ரவுடி அக்பர் கான் (வயது 43) என்பவர் நடைபாதையில் இடையூறாக அமர்ந்துள்ளார்.
இதைப் பார்த்து ஸ்ரீதர் அவரை ஓரமாக அமர சொல்லி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அக்பர்கான் மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீதர் இடம் தகராறு செய்தனர். பின்னர் இரண்டு பேரும் ஸ்ரீதரை பீர் பாட்டிலால் தாக்கி உள்ளனர்.
இதனால் ஸ்ரீதர் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
இது குறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ரவுடி அக்பர் கான் மற்றும் அவரது மனைவி பாத்திமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் அக்பர் கான் மற்றும் அவரது மனைவி பாத்திமா இருவரும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சூப்பு கடை நடத்த அனுமதி கேட்டு மனு அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

