நாளை நடைபெற உள்ள திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு.
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
தெற்கு மாவட்ட செயலாளர் ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். 
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி சேர்மன்கள், அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கீழ்க்கண்ட பொருட்களில் நடைபெற உள்ளது.
1. கழக தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பணிகள் குறித்து . 
2. 19/12/2025 அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாதிரியை வைத்து BLA-2 அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெயர் சேர்த்தல், நீக்கல் சம்பந்தமான தீவிரப் பணிகளை ஈடுபடுத்தல்.
3.கழக ஆக்க பணிகள் குறித்து. ஆலோசனை நடைபெறும் என
முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

