Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர பகுதிகளில் போலீசாரின் அதிரடி வேட்டையில் லாட்டரி, போதை மாத்திரைகள் விற்ற 12 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாநகர பகுதிகளில் போலீசாரின் அதிரடி வேட்டையில் லாட்டரி, போதை மாத்திரைகள் – 12 பேர் கைது

2 வாகனங்கள், 4 செல்போன்கள், பணம் பறிமுதல்

திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டுகள், போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, உறையூர், அரசு மருத்துவமனை, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .இந்த அதிரடி சோதனையில் திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு வாகனங்கள், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 15,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதே போல் திருச்சி கே.கே.நகர் பகுதியில் கேகே நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் தமிழ்நாடு ஓட்டல் ( பழைய எஸ்ஆர்எம் ) அருகே போதை மாத்திரைகள் விற்றதாக பிரிண்ஸ், ஆல்பின் ஆகிய இரண்டு வாலிபர்களை கேகே நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து உள்ளனர் . மேலும் அவர்களிடமிருந்து 60 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.