ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் : மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார் .
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் , இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் அமைந்துள்ள அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் ராவணன், எஸ் கே டி கார்த்திக், நகர செயலாளர் பாண்டியன், பகுதி கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர் என்கிற கோபால் ராஜ், தண்டபாணி, பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ்.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.கார்த்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் பகுதி கழக நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் , செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

